மௌனத்தில் நீவிரித்த நெஞ்சத்தின் புத்தகம்

காற்றோடு கலைந்தாடும் மலர்பூங் கூந்தல்
கனவோடு நனவிலும் மிதக்கும் கருவிழிகள்
புரியாத புதிர்போடும் புன்னகை இதழ்கள்
புரியாமலா போய்விடும் வண்ணவரிகளில்
மௌனத்தில் நீவிரித்த நெஞ்சத்தின் புத்தகம் ?

எழுதியவர் : கவின் சாரலன் (6-Feb-19, 4:08 pm)
பார்வை : 144

மேலே