உன் உள்ளத்தில் நான் இருக்க ஆசையடி 555

என்னுயிரே...


உன் வட்ட முகத்தில் காந்தம்போல்

என்னை கட்டி இழுக்கும் இரு கண்கள்...



ஆரஞ்சு சுளைகளை
ஒட்டி
வைத்தது போல்...



இரு அழகிய
உதடுகள்...



பழுத்த பப்பாளிபோல் கொழு

கொழு இரு கன்னங்கள்...



புல்லாங்குழல்

துவாரம்போல் நாசி...



என்னை கைநீட்டி அழைக்கும்

உன் காதோரம் ஆடும் ஜிமிக்கி...



சங்கு கழுத்தில் தொட்டு நெஞ்சுவரை

பரவி இருக்கும் பாசிமணிகள்...



உன் நெஞ்சை தொடும்

பாசிமணிகள் நானாக...



உன் உள்ளத்தில்
இருக்க
ஆசையடி கண்ணே.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (6-Feb-19, 4:47 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 596

மேலே