ஹரிபிரசாத் கவிதை

21
கண்கள் பெருகுதடி
கண்கள் பெருகுதடி - அதுவும்
கடலாய் மாறுதடி !
சின்ன விண்மீனே - உந்தன்
சிறு விழி நனைகையிலே !

வேலை பிடிக்கவில்லை - எனக்கோ
வெறுங்கதை பிடிக்கவில்லை !
மகளே நீ அழுவதினால் - எந்தன்
மனமும் இளகுதடி !

கண்ணீர் மாலைகளை - உந்தன்
கண்களில் யார் தொடுத்தார் ?
என்ன வேண்டுமம்மா ? எனக்கோ
உந்தன் புன்னகை வாழ்க்கையடி ....

ச. ஹரி பிரசாத்

எழுதியவர் : (6-Feb-19, 5:50 pm)
பார்வை : 36

மேலே