சீக்கிரத்தில் உன் இதயம் அடைவேன்

உன் வீரியப் பார்வை வில்புருவ விழியிலிருந்து
காரிருளை கிழித்த சிறு ஒளி போலே என் மேல் பாய
இனம் காணா நெகிழ்வில் என்னிதயம் மகிழ
என் தேகம் முழுதும் வெண் பனி பொழிய
பண் இசைக்கும் குயிலாய் நான் பாடி திறிய
பங்குனி திங்கள் மார்கழியாய் மாற
நோக்குகிறேன் உந்தன் நிறைவான காதலை
அரும்பான காதல் அழகாக மலர்ந்தால்
சிறந்ததோர் காவியம் சிறகடித்து பறக்கும் - இல்லை
சிறிது சிறிதாய் உன் சிந்தையில் புகுந்து
சீக்கிரத்தில் உன் இதயம் அடைவேன்.
__ நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (7-Feb-19, 8:26 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 387

மேலே