ஒரு தாலாட்டு

ஒரு தாலாட்டு.
============================================ருத்ரா

மயிலே கிளியே
மனங்களின் மடியில் வா!
இன்பத்தின் சிறகுகள் கொண்டு
மனங்களின் மடியில் வா!
வானமும் கடலும்
உன் கூட வரும்.
என் வாழ்வு நீளும்
என் தாகம் மூளும்.
நீ தானே
கை விளக்கு!
காதல் தந்த எழுத்திலே
ஒரு சொல் ஆகினாய்.
சொர்க்கம் வேண்டாம்.
வைரங்கள் வேண்டாம்.
உன் முறுவல்
ஒன்று தா!..கண்ணே
உன் முறுவல்
ஒன்று தா!
தாலேலோ..தாலேலோ
தமிழே தமிழே தாலேலோ

========================

எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன். (8-Feb-19, 8:58 am)
சேர்த்தது : ருத்ரா
Tanglish : oru thaalaattu
பார்வை : 1211

மேலே