புதிரான மௌனம்

மென்மையைவிட மென்மையானவன் நீ

என்றாலும்

என் இருதயத்தை ரணமாக்குகிறாய்

அன்பெனும் புனிதப்பயணத்தில்

சோர்வில்லாமல்

உன் அகக் கோட்டை நோக்கி வந்துகொண்டே இருக்கிறேன்

பேச்சற்று

சிந்தனையில் ஆழ்ந்திருக்கும்

உன்னை காணும்போது

குழம்பிப்போகிறேன்

அறிவிழந்து நிற்கிறேன்

பதிலில்லா மௌனத்தில் உறைந்த உன் பிம்பம்

என்னை அறியமுடியா துயரத்தில் ஆழ்த்துகிறது

“என் ஆன்மாவின் பேச்சற்ற தனிமையில்

கிடப்பதுதான் உன் ஊழா” என்ற குரலில்லா எண்ணம்

என் அகத்தில் மீண்டும் மீண்டும் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது



பதிலாக வசீகரமான புன்னகையை நீ அளிக்கிறாய்

நாணக்கேட்டில் குனிகிறது என் தலை.

----------------------------------------------------------------------------------
நித்ய சைதன்ய யதி
Posted on May 31, 2017 by thiruviruppon

எழுதியவர் : (11-Feb-19, 4:56 am)
Tanglish : pudirana mounam
பார்வை : 84

மேலே