நம்பிக்கை வை
நாளை விடியும் பொழுதும்
நன்றாம் என்றே நம்பு
ஏழை வாழ்வும் ஓர்நாள்
ஏற்றம் கொள்ளும் நம்பு
கோழை என்றும் கோழை
கொள்கை தன்னை தள்ளு
வேலையில் வந்திடும் வெற்றி
விரைந்து தழுவிடும் நம்பு !
என்றும் நன்றாய் வாழ்வோம்
என்பதை நெஞ்சில் கொள்ளு
குன்றின் விளக்காய் மாறும்
காலம் வந்திடும் சொல்லு !
பண்பினைப் போற்றி வாழு
பாசமாய் தழுவுவார் தோளு !
அன்பின் வழியில் செல்லு
ஆனந்தம் கோடி நம்பு !
வானமும் கைவச மாகும்
நெஞ்சில் உறுதி கொண்டால்
தானம் செய்தே வாழு
தலையினைக் காக்கும் நம்பு
ஊனம் உள்ளத்தில் இன்றேல்
ஊரும் உலகும் வாழ்த்தும்
மானம் பெரிதெனக் கொள்ளு
மனமே வெல்லும் நம்பு !