காதலால் ஆனவன் நான்

நான் கடவுள் அல்ல
சாட்டை கொண்டு
விளாசிட

நான் மனிதனல்ல
மனித நேயம் கொண்டு
நேசித்திட

நான் உணர்வுகள் அல்ல
உறவுகள் கொண்டு
துக்கித்திட..

நான் அனைத்தும்
கலந்த கலவை
காதல் என்பதனை தவிர அறியாத
புதுப் பிறவி நான்...

காதல் இல்லையென்றால்
சாவுதான் என் வாழ்வு
பிறரின்பம்
அது என்றோ கேட்க மறந்த
கோரிக்கை

பிறர் துன்பம்
அது என்றோ கேட்க மறந்த
வேடிக்கை

நான் வானத்திலிருந்து
குதித்தேன்
அவளும் தான்

எங்களுடைய
தழுவல் உணர்வுகளை தவிர
வேறொன்றும் இல்லை...

நான் மனிதனல்ல
காமத்தால் படைக்கப்பட்டவனல்ல
காமம் என் உயிருமல்ல
காதல்தான் என் உயிர்...

காதல் என்றால்
தெரியாது
ஆனால்
காதலால் ஆனவன் நான்...

எழுதியவர் : சா.மனுவேந்தன் (15-Feb-19, 9:54 pm)
சேர்த்தது : மனுவேந்தன்
பார்வை : 272

மேலே