தீவிரவாதம்
தீவிரவாதம்
தன் அகோரத்தை
அழகாய் அரங்கேற்றி
மனிதத்தை
மண்ணொடு மண்ணாக்கி
வன்மையை உணர்த்திய தருணம்...
அது
புத்தரும் யேசுவும் நபியும்
ஒன்றாய் கூடி அழுதிட்ட தருணம்....
எத்தனை முறை நான்
சிலுவை ஏறினால் இவர்கள்
இரக்கம் கொள்வர்
என ஏங்கினார் ஏசு....
இவர்கள் பாவங்களை எல்லாம்
நான் சுமந்தால்
இனியேனும் மனிதம் கொள்வரா
என வினவினார் அல்லாஹ்...
இன்னொரு முறை
போதியில் அமர்ந்தால்
அமைதி கொள்ளுமோ
அகிலம் என்றார் புத்தர்...
எதையுமே உணராத தீவிரவாதமே மனிதத்தின் தீரா வாதமே
இப்படியே போனால்
இன்னொரு காந்திக்கு
நான் எங்கே போவேன்...