காதல் வானில் கவிதை மேகமாய்

ஒவ்வொரு கவிதையும்
உன்னை நினைத்து
ஒவ்வொரு பாடலும்
உன் அழகை குறித்து
உலா வரும் வெண் மேகமாய் ....!

என்னை மறந்து மறந்து
உன் நினைவை விதைத்தேன்
என் உள்ளம் காதல் கொண்டது
இல்லை அது அந்தக் காலம்
கால்கள் தரையில் இல்லை
இன்றைய இன்பக் கோலம் ....!


கவி வரிகளாலே
உன்னை அழைக்கின்றேன்
எந்தன் உயிரிலே
உன்னைக் கலக்கின்றேன்.


காலம் கனியாது கண்டு
கலங்கி முழிக்கிறேன்
நித்ததும் உன் முகத்திரையில்
விழிக்கிறேன் தூக்கம்
கலைக்கிறேன் துக்கம் சுமக்கிறேன்
மழை சுமக்கும் மேகமாய் இருக்கின்றேன் ...!


தக்கம் பண்ண. தைரியம் இல்லை
தகுதியும் இல்லை
தகராறு பண்ணாது
நீ வா என்னிடம் காதல் வானிலே
கவிதை மேகமாய் அன்பே ....!


ஒத்தையடிப் பாதை தான்
ஒத்தையான பயணம் தான்
ஒத்துப்போக வேண்டும் என்று
ஒற்றுமையாக நான்
அழைக்கின்னேன் நின்று
சுற்றி வரும் பூமி பார்த்த வானமாய்
காற்றை தழுவும் முகிலாய் வா அன்பே....!


வெறுத்து நீ என்னை ஒதுக்காதே
மறந்து நீயும் ஒதுங்காதே உறவை
அறுத்து விட்டும் செல்லாதே பேச்சை நிறுத்தியும் என்னைக் கொல்லாதே....!


வெள்ளந்தி பிள்ளை நான்
உன் காதல் கண்ணை திறந்து
பார் உன் கருணை நெஞ்சினிலே
இடம் கொடு உன் கன்னியமான
வாழ்வோடு என்னையும்
இணைத்து வாழ்ந்து முடி
வாழ்த்துவோரையும் தேடிக்
கண்டு பிடி மறந்து விடாதே
என் கரங்களை இணைத்துப் பிடி..!

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (16-Feb-19, 12:13 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 120

மேலே