விழிமலராயோ என் கனவுத் தேவதையே
விடியக் காத்திருக்கிறது
இரவு
வெளிச்சம்வரக் காத்திருக்கிறது
பறவைகள்
விரியக் காத்திருக்கிறது
மலர்கள்
துயில் கலையக் காத்திருக்கிறது
உன் மலரிமைகள்
விழிமலராயோ என் கனவுத் தேவதையே
புனையக் காத்திருக்கிறது என் மடிக் கணினி
உன்னை தென்றல் கவிதையாக....