விழிமலராயோ என் கனவுத் தேவதையே

விடியக் காத்திருக்கிறது
இரவு
வெளிச்சம்வரக் காத்திருக்கிறது
பறவைகள்
விரியக் காத்திருக்கிறது
மலர்கள்
துயில் கலையக் காத்திருக்கிறது
உன் மலரிமைகள்
விழிமலராயோ என் கனவுத் தேவதையே
புனையக் காத்திருக்கிறது என் மடிக் கணினி
உன்னை தென்றல் கவிதையாக....

எழுதியவர் : கவின் சாரலன் (17-Feb-19, 4:18 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 62

மேலே