துன்பமே கேட்டுக்கொள்
துன்பமே கேட்டுக்கொள்
வலிகளை பொறுத்து கொள்வேன்
பொறுமையின் சிகரத்தின் நுனி வரை ....
துன்பமே கேட்டுக்கொள்
புறமுதுகு காட்டி ஓடமாட்டேன்
நீ புலம்பி வீழும் வரை .....
துன்பமே உன்னை காத்துக்கொள்
என் வெற்றியின் மழையில்
துவண்டு வீழாமல் உன்னை
காத்துக்கொள் ......
துன்பமே நீ புயலாகி வீசினாலும்
இன்று நான் நாணால் தான்
வளைந்துகொடுத்து போவேன்
ஒருநாள் மரம் ஆவேன்
அன்று என் தென்றலும்
உன்னை விரட்டிவிடும் ....
தென்றலே இரவு மட்டுமே பிழைத்திரு
மறுநாள் சூரியன் உதித்திடும்
என் வெற்றியின் வாசற்படியில் .