இல்வாழ்வு என்றும் நல்வாழ்வாகும்
அன்பெனும் உணர்வு பரிமாற்றம்
பண்புடன் பகிர்ந்துக் கொண்டால்
இணையும் இதயங்கள் இரண்டும்
விளையும் உறவும் விவேகமுடன்
துவங்கும் புதியதொரு அத்தியாயம்
இனிக்கும் இல்லறமெனும் நல்லறம்
இடரில்லாத பாதையில் பயணமும்
இருவேறு உள்ளங்கள் ஒன்றாகும்
ஒருமித்தக் கருத்தும் நிலையாகும்
பாசமுடன் நேசமும் பொறுமையும்
பிறழாது எக்காலமும் என்றானால்
இல்வாழ்வு என்றும் நல்வாழ்வாகும் !
பழனி குமார்