ஏழைத்தாய் மகன் நானென்பான்

மூளை இல்லாதவனும், பாரில் இல்லாதவனும்
ஆள்கின்ற நாட்டினிலே,
அணுகுண்டு வெடித்தால், அனுதாபம் தேடும்
அறை முட்டாள் மானுடரே !
கோ செய்யும் தவறை, கோபங்கள் கொண்டு
வலைப்பக்கம் நீ பகிர்ந்தால்,
கோவணம் கட்டியே, கோட்டை ஆளும்
ஏழைத்தாய் மகன் நானென்பான்.
ஆட்சி மாற்றங்கள், கட்சி மாறல்கள்
நம் அரசியல் நிலைப்பாடு.
ஐந்தாண்டு வாந்தால், ஐம்பது வாங்கி
பையில் வைப்பது திருவோடு.

-பாலா தமிழ் கடவுள்🙏

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (19-Feb-19, 10:52 am)
சேர்த்தது : பாலா தமிழ் கடவுள்
பார்வை : 445

மேலே