காதல்
அதிகாலை வேளை
தாமரை தடாகத்தில் நான்
கதிரவன் கிரணங்கள் தொட்டுவிட
மடல் விரிந்தன பூவாய் கமலம்
என்னருகே நின்றிருந்த என்னவள்
என் பார்வையால் மடல் விரிய
புன்னகைத்தாள் தாமரையாய்
பொற்றாமரையாள் அவள்.