நாகர்கோயில் புத்தகக் கண்காட்சி

நாகர்கோயிலில் சென்ற பிப்ரவரி 15 முதல் புத்தகக் கண்காட்சி நடந்துவருகிறது. நூறுக்கும் மேற்பட்ட அரங்குகள். மாவட்ட நிர்வாகத்தின் ஒருங்கிணைப்பாதலால் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கிழக்கு, காலச்சுவடு, உயிர்மை, நற்றிணை,தமிழினி போன்ற இலக்கியப் பதிப்பகங்கள் அனைத்தும் பங்கெடுத்திருக்கின்றன

வரும் 20 ஆம் தேதி மாலை நானும் நாஞ்சில் நாடனும் பேசுகிறோம். நான் இன்றைய இலக்கிய ஆக்கங்கள் என்னும் பொதுத்தலைப்பில் பேசுகிறேன்



எழுத்தாளர் ஜெயமோகன்.
20 2 2019

எழுதியவர் : (20-Feb-19, 6:11 am)
பார்வை : 28

மேலே