கண்கள் சொல்லும் காதல்கீதை

கண்ணிமை கள்கவிந் தால்அந்திப் பொன்மாலை
கண்ணிரண் டும்விரிந்து சொல்வதோகா தல்கீதை
பாதைநீ காட்டுவது அந்தியுப தேசமாயின்
ராதைநீ உன்கண்ணன் நான் !

எழுதியவர் : கவின் சாரலன் (20-Feb-19, 8:40 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 99

மேலே