அழகு

💐 அழகு 💐

நீலத்தை எடுத்துவிட்டால்
வானத்திற்கு ஏது அழகு.

செடியிலிருந்து பூ
உதிர்ந்து விட்டால்
செடிக்கு ஏது அழகு.

நிலவில் இருந்து ஒளி
நீக்கி விட்டால்
நிலவுக்கு ஏது அழகு.

கடலில் அலை
நின்று விட்டால்
கடலுக்கு ஏது அழகு.

சிலைக்கு கண்கள் திறக்காவிட்டால்
சிலைக்கு ஏது அழகு.

மலைக்கு உச்சியில்லை இல்லை
என்றால் மலைகேது அழகு.

பெண்ணுக்கு நாணம்
இல்லை என்றால் பெண்ணுக்கு ஏது அழகு.

ஆணுக்கு வீரம் இல்லை என்றால் ஆணுக்கு ஏது அழகு.

குழந்தையிடம் மழலை
இல்லை என்றால் குழந்தைக்கு ஏது அழகு.

இசையில் ஜீவன் இல்லை என்றால் இசைக்கு ஏது அழகு.

கோயிலுக்கு கோபுரம்
இல்லை என்றால் கோயிலுக்கு ஏது அழகு.

குடும்பத்தில் மகிழ்ச்சி இல்லை என்றால் குடும்பத்திற்கு ஏது அழகு.

ஆணுக்கு வேலையில்லை என்றால் ஆணுக்கு ஏது அழகு.

யானைக்கு தந்தம் இல்லை என்றால் யானைக்கு ஏது அழகு.

வானவில்லுக்கு வண்ணம்
இல்லை என்றால்
வானவில்லுக்கு ஏது அழகு.

வீட்டுக்கு வாசல் இல்லை என்றால் வீட்டுக்கு ஏது அழகு.

விளக்கிற்கு ஒளி இல்லை என்றால் விளக்கிற்கு ஏது அழகு.

மனிதனுக்கு கல்வி
இல்லை என்றால் மனிதனுக்கு ஏது அழகு.

வேற்றுமையில் ஒற்றுமை இந்தியாவில்
இல்லை என்றால்
இந்தியாவுக்கு ஏது அழகு .
- பாலு.

எழுதியவர் : பாலு (21-Feb-19, 5:45 am)
சேர்த்தது : balu
Tanglish : alagu
பார்வை : 105

மேலே