மொட்டு விரியும் மலரையொத்த

பட்டுச் சிறகடிக்கும் என்
பட்டாம்பூச்சி பாவையே..
மொட்டு விரியும்
மலரையொத்த உன்
கட்டுடல் படும்போது நீ
விட்டுப் போன இதழ்
சொட்டு தேனை பருகி
மெட்டு போட துடிக்கிறதே
என் இதயம்....

எட்டுப் போட்டு என்னருகில்
வருவாயா... உன்னை
தொட்டு விட
துடிக்கும் எனக்கு
கால் கட்டு போட விரும்பும்
என் பெற்றோருக்கு
சுட்டுப் போட்ட தங்கமாய்
உன் பட்டு காலடி எடுத்து
வைக்க சட்டென்று
என் வீடு வருவாயா...

எழுதியவர் : ஜெய் ரெட்டி (22-Feb-19, 12:41 pm)
சேர்த்தது : ஜெய் ரெட்டி
பார்வை : 107

மேலே