நிரல் பலகை

ஏதோ ...?
ஓர் புள்ளியில் துவங்கி
அர்த்தமற்ற கோடுகளில்
தொடர்ந்து...
முற்று பெறாத
கிறுக்கள்களில்
முடித்திட ஆசைதான்...
எனினும்
மீண்டும் பயணிக்கிறது
உன் மெளனத்தின்
பரிபாசையும்....
அந்த விழிகளின்
மொழியும்...
எதையாவது
நிரப்பிவிட
எத்தனிக்கிறது....

எழுதியவர் : சுரேஷ் குமார் (23-Feb-19, 12:50 am)
சேர்த்தது : சுரேஷ்குமார்
பார்வை : 65

மேலே