யாரோவாகிப் போன அவள் கவிஞர் இரா இரவி

யாரோவாகிப் போன அவள் ! கவிஞர் இரா .இரவி !

உனக்காக நான் எனக்காக நீ
உயிர் உள்ள வரை பிரியோம் !

உடல் இரண்டு உயிர் ஒன்று
உள்ளம் இரண்டும் ஒன்றானது !

உலகமே எதிர்த்தாலும் நான்
உந்தன் கரம் பிடிப்பேன் !

நான் இன்றி நீ இல்லை
நீ இன்றி நான் இல்லை !

என் வாழ்வு உன்னோடுதான்
உன்னைப் பிரிந்தால் உயிர் வாழேன் !

இப்படியெல்லாம் சொன்ன அவள்
இன்று என்னோடு இல்லை !

காலத்தின் கோலம் பிறந்தோம்
கள்ளி என்னை மறந்தாள் !

வேறு ஒருவன் கரம் பிடித்து
வசதியாக குழந்தைகளுடன் !

யாயும் ஞாயும் யாரா கியரோ
யாரோவாகிப் போன அவள் !
.

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (23-Feb-19, 2:17 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 78

மேலே