நன்றி சொல்வேன்
நான் நன்றி சொல்வேன் நீல வானுக்கு
-----------------------------------------எழில் நிலவினை தந்தத்திற்கு
நான் நன்றி சொல்வேன் நதிகளுக்கு
-----------------------------------------நீராட குளிர்நீர் தந்தத்திற்கு
நான் நன்றி சொல்வேன் பூந்தோட்டத்திற்கு
-----------------------------------------காட்சியாய் மலர்களை கண்முன் விரித்ததிற்கு
நான் நன்றி சொல்வேன் உன் கண்களுக்கு
---------------------------------------என் உணர்வுகளை கவிதை ஊற்றாய் ஆக்கியதற்கு
நான் இன்னும் நன்றி சொல்வேன் உனக்கு
----------------------------------------நீ அந்தச் சொல்லை காதில் வந்து சொல்லிவிட்டால் !