தேடும் வேலை எள்ளிய நிலையில்

ஆழும் மனதில் சோகம் வந்து
அதனால் மனம் அமைதி இழந்து
வாழும் நிலை வழுக்கி விழுந்து
வாலிப வயதில் இம்சைகள் நிறைந்து
தேடும் வேலை எள்ளிய நிலையில்
யாரால் தான் இன்பம் உண்டு.

பந்த பாசம் எல்லாம் ஒரு கோடாய்
போய் மறைகின்ற நிலையில்
கிடைக்கின்ற உணவுக் கூட
கேடு நிறைந்த விஷமாய் ஆச்சே
படித்தெளிந்த படிப்பும் கூட
பயங்காட்டும் பேயாய் ஆச்சு

வசப்பட்ட வசந்தம் கூட
வாசமில்லா மலராய் போச்சு
வஞ்சகர் சூழ்ச்சி எல்லாம்
வளம் பெற்று எழவே ஆச்சு
விதை என்று நினைத்த குழந்தை
வில்லங்கமாய் மாறலாச்சு

விதி என்று ஒதுங்கி சென்று
வீதியில் வாசம் புரியலாச்சு
சதி ஒன்று பதியம் போட
சாதிக்க எண்ணம் தூண்டலாச்சு
கந்தனை மனம் எண்ணலாச்சு
கடந்த காலம் மறந்தே போச்சு.
-- - நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (1-Mar-19, 10:24 am)
பார்வை : 86

மேலே