பிச்சை

"செண்பகம்... செண்பகம்.." ஜலத்தை மோண்டு வையேண்டி... நாளியாதுள்ள பேசிக்கொண்டே உள்ளே நுழைந்தான் ரவி...

என்னங்க இது தினுசா பேசுறீங்க.. கேள்வியோடே முகத்தை ஏறிட்டு பார்க்க.. சிறு புன்முறுவலுடன் கடந்து போனான்..

"அம்மா தாயே...! அம்மாமா தாயே....! தெருவோரக் கதவின் முன் அழைப்பொலி கேட்டு பழைய சாதம் எடுக்கப் போனாள் செண்பகம்...

என்ன அங்க சத்தம் செண்பகம்.. பிச்சைகாரன்ங்க என்ற குரலுடன் பழைய சாத பாத்திரத்துடன் வாசலை நோக்கி சென்றாள்...

இந்த பிச்சைகாரங்களுக்கு வேற வேலையே இல்ல எங்க போனாலும் தொடர்ந்து அம்மா தாயே.. ஏதாவது தருமம் செய்யுங்கன்னுட்டு.. சே... சே... அலுத்துக் கொண்டே மடிப்பிச்சை கேட்பதற்காக தயாராகிக்கொண்டிருந்தான் ரவி என்ற ரவிக்குமார்....

எழுதியவர் : சா.மனுவேந்தன் (1-Mar-19, 1:05 pm)
சேர்த்தது : மனுவேந்தன்
Tanglish : pitchai
பார்வை : 378

மேலே