தலைச்சன்பிள்ளை
சுகமாய் முதுகில்
சுமைகளைச் சுமப்பவன்...
மறுப்புகள் இன்றி
பொறுப்புகள் ஏற்பவன்...
கைப்பொருள் தன்னை
காவற் காக்க மறந்தவன்...
தாபங்கள் மறைத்து
ஏக்கங்கள் கொண்டவன்...
கடமைக் கவசம் அணிந்து
உரிமைப் போரில் தோற்பவன்...
தகப்பனின் கண்டிப்பையும்
தாயின் கனிவையும் - ஒருங்கே
தரும் அவனே
தலைச்சன்பிள்ளை....