தலைச்சன்பிள்ளை

சுகமாய் முதுகில்
சுமைகளைச் சுமப்பவன்...

மறுப்புகள் இன்றி
பொறுப்புகள் ஏற்பவன்...

கைப்பொருள் தன்னை
காவற் காக்க மறந்தவன்...

தாபங்கள் மறைத்து
ஏக்கங்கள் கொண்டவன்...

கடமைக் கவசம் அணிந்து
உரிமைப் போரில் தோற்பவன்...

தகப்பனின் கண்டிப்பையும்
தாயின் கனிவையும் - ஒருங்கே
தரும் அவனே
தலைச்சன்பிள்ளை....

எழுதியவர் : காதம்பரி (2-Mar-19, 7:28 pm)
சேர்த்தது : காதம்பரி
பார்வை : 70

மேலே