தாமரைப்பூ

தாமரைப்பூ நீரின்மேல்
நீரில் படாது பூக்கும்
அதன் பெரிய இலைகளில்
நீர்த்துளிகள் ஒட்டுவதில்லை
தவச்சீலர்களை ஒக்கும் தாமரை
அருங்குணத்தில் அதனால்
மலர்களில் தாமரையும் அருமலரே
தனிச்சிறப்பில் மாலும் அலைமகளும்
கலைமகளும் விரும்புவதும் இம்மலர்
என்று ஆன்றோர் கூறுவர்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (3-Mar-19, 8:17 pm)
பார்வை : 189

மேலே