தாமரைப்பூ
தாமரைப்பூ நீரின்மேல்
நீரில் படாது பூக்கும்
அதன் பெரிய இலைகளில்
நீர்த்துளிகள் ஒட்டுவதில்லை
தவச்சீலர்களை ஒக்கும் தாமரை
அருங்குணத்தில் அதனால்
மலர்களில் தாமரையும் அருமலரே
தனிச்சிறப்பில் மாலும் அலைமகளும்
கலைமகளும் விரும்புவதும் இம்மலர்
என்று ஆன்றோர் கூறுவர்.