நான்குபோது உண்பான் உடல்விட்டுப் போகுமே யென்று புகல் - நீதி வெண்பா 9
நேரிசை வெண்பா
ஒருபோது யோகியே ஒண்டளிர்க்கை மாதே
இருபோது போகியே யென்ப - திரிபோது
ரோகியே நான்குபோது உண்பான் உடல்விட்டுப்
போகுமே யென்று புகல். 9 நீதி வெண்பா
பொருளுரை:
”ஓள்ளிய தளிர் போலுங் கைகளையுடைய பெண்ணே! ஒருநாள் ஒருபொழுது உண்பவன் யோகியென்றும், இருபொழுது உண்பவன் போகியென்றும், ஞானியர் சொல்வர்; மூன்று வேளை உண்பவன் வியாதியாளனென்றும், நான்கு வேளை உண்பவன் உயிர் உடலினின்று விரைவில் விட்டுப் போகுமென்று சொல்” எனப்படுகிறது.