பூந் தோட்டமே என் கதை கேளாயோ

என் அழகான பூந் தோட்டமே
உன் காவல்காரன் நான் கண்ணீருடன் வந்திருக்கும் கதை கேளாயோ ,,,,,


நீ என் தோட்டமெல்லாம் பூத்து நிறைந்திருப்பது போல !


அவள் என் உள்ளமெல்லாம் பூத்து
நிறைந்து விட்டாள்

என் கண்களெல்லாம் குடிகொண்டு விட்டால்

எங்கு பார்த்தல் நிழல் படமாகிறாள்

எதிரே பார்த்தால் உரை படமாகிறாள்

எழுந்து தொட்டு பாத்தாள் பட்டென மறைந்து போகிறாள்

காரணம்தான் புரியவில்லை
இந்த கண்ணியவள் என் துயரத்தை பெரிதாக எண்ணவில்லை

ஆதலால்

நான் அவளை எண்ணியெண்ணி என் கண்ணீரில் ஆறுதல் தேடினேன்

எனக்கு ஆறுதல் கூற நீயாவது என்னுடன் நிலைத்திருப்பாயா ?

நீயும் என்னை வெறுத்து பேசாமல் மௌனமாய் வாடி விடுவாயா .

எழுத்து
ரவி s

எழுதியவர் : ரவி s (7-Mar-19, 9:34 pm)
சேர்த்தது : Ravisrm
பார்வை : 346

மேலே