இராணுவனின் குரல்

தாயின் கருவறையில் நான் மலர்ந்தாலும்
மடிவது மட்டும் - என்
பாராத தாயின் மடியில்தான் !

சீறி வரும் குண்டுகளும்
என் மீது பட்ட காயங்களும்
எனக்கு அளிக்கப்பட்ட அழியா விருதுகள்
விருதுகளின் மகிழ்ச்சியை - என்
தேசத்திற்கு தருகிறேன் - ஆனால்
விருதுகளின் வலியை மட்டும் - என்
தேகத்திற்கு தருகிறேன் .....

எங்கள் மூச்சு நிற்கும் கடைசி நொடி கூட ...
மூவர்ணக் கொடிக்காகத்தான் இருக்க வேண்டும் !

இறுதியில் ,

எங்கள் மேல் ரோஜா மழை பெய்ய வேண்டும் !
எங்கள் மணம் தியாகத்தினால் நிறைய வேண்டும் !

எழுதியவர் : லாவண்யா (7-Mar-19, 11:21 pm)
சேர்த்தது : lavanya
பார்வை : 274

மேலே