உண்மை
உண்மை என்றும் விலைபோவதில்லை
அது ஏன் என்று கேட்டான் நண்பன்
உண்மைக்கேது விலை அதனால் என்றேன்
விழித்தான் நண்பன் புரியாமல் , நான்
சொன்னேன்,'நண்பா பொய்க்கு விலையுண்டு
நீ அறிவாய் தினமும் நான் செய்யும்
வியாபாரம் ஒவ்வொன்றிலும் பொய்
கலந்திருக்கிறது …….. வெறும் உண்மை
விலைப்போகாது … அது விலை மதிப்பற்றது
தகுதியுடையோர்க்கே கிட்டும் அரும்பொருள்
அதுவே உண்மை என்றேன் ' கேட்டு நண்பன்
அமைதியானான்