இதுதான் காதலா
மலர்கொத்தொன்றை
கையில் திணித்தே
மனதின் ஆசை நீ என்றான்....
மறுக்கும் அதிகாரமும்
அவகாசமும் அவளுக்கவன்
தரவில்லை
நாளை வருவேன்
நல்ல பதில் வேண்டும்
கட்டளையிட்டே
கலைந்து சென்றான்....
மறுநாள் வந்தான்....
எதிர்வினையாக அவள்
புன்னகை எதிர்பார்த்து....
ஆற்றா எதிர்வினைக்
கெதிர்வினையாக
முகத்தில் அமிலம்
ஊற்றிச்சென்றான்......
காதல் பொசுக்குமா......
வெந்தது தணியுமா....jQuery17104503826544433285_1552107557808?