நாயின்வால் பற்றி நதிகடத்தல் உண்டோ நவில் - நீதி வெண்பா 11

நேரிசை வெண்பா

உற்றபெருஞ் சுற்றம் உறநன் மனைவியுடன்
பற்றிமிக வாழ்க பசுவின்வால் - பற்றி
நதிகடத்தல் அன்றியே நாயின்வால் பற்றி
நதிகடத்தல் உண்டோ நவில். 11 நீதி வெண்பா

பொருளுரை:

பொருந்திய பெரிய உறவினர் சூழ, நல்ல மனைவியுடன் கூடி மிக வாழ்க; பசுவின் வாலைப் பிடித்துக் கொண்டு ஆற்றைத் தாண்டுவதல்லாமல், நாயின் வாலைப் பிடித்துக் கொண்டு ஆற்றைத் தாண்டுவதுண்டோ? நீ சொல்வாயாக.

கருத்து:

தன் மனையாளல்லாத மற்ற பெண்களோடு கூடி வாழ்தல் துன்பத்துக்கு ஏதுவாகும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Mar-19, 7:50 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 46

சிறந்த கட்டுரைகள்

மேலே