நாயின்வால் பற்றி நதிகடத்தல் உண்டோ நவில் - நீதி வெண்பா 11
நேரிசை வெண்பா
உற்றபெருஞ் சுற்றம் உறநன் மனைவியுடன்
பற்றிமிக வாழ்க பசுவின்வால் - பற்றி
நதிகடத்தல் அன்றியே நாயின்வால் பற்றி
நதிகடத்தல் உண்டோ நவில். 11 நீதி வெண்பா
பொருளுரை:
பொருந்திய பெரிய உறவினர் சூழ, நல்ல மனைவியுடன் கூடி மிக வாழ்க; பசுவின் வாலைப் பிடித்துக் கொண்டு ஆற்றைத் தாண்டுவதல்லாமல், நாயின் வாலைப் பிடித்துக் கொண்டு ஆற்றைத் தாண்டுவதுண்டோ? நீ சொல்வாயாக.
கருத்து:
தன் மனையாளல்லாத மற்ற பெண்களோடு கூடி வாழ்தல் துன்பத்துக்கு ஏதுவாகும்.