காதல்

தாமரையில் துள்ளும் இரு கயல்போல
செந்தாமரை முகத்தாள் விழிகளிரண்டும்
இங்கும் அங்கும் அலைய இமைகள் மூடி திறக்க
கமலம் அவள் என்னைத் தன பார்வையால்
தன்னுள்ளத்தில் பூட்டிவைத்த கயல்விழியாள்
ஆடி வந்தாள் அவள் கலாப மயிலாய் பாடி
சோலைக்குயிலாய் என் மனதின் காதல்
குயிலாய் வந்தாளே கனிமுகம் காட்டி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (9-Mar-19, 4:20 pm)
Tanglish : kaadhal
பார்வை : 213

மேலே