கடவுளவர் நேரில் வந்தால்

கடவுளவர் நேரில் வந்தால்
காதிரைண்டை மூடி கொள்வார்

காற்று அவள் ஓடிவிட
கங்கை அவள் மறுத்துவிட

வசமாக மாட்டிகொள்வார்
கடவுளும் என்னிடமே

கேள்விகளை நான் தொடுக்க
வேள்வி அவள் மறைந்திடுவாள்

மாதாவும் மறுத்திவிடுவாள்
அவருக்கு துணை நிற்க

ஆகாயம் வெறுமையாகி
அவரைதான் நிந்திக்க

ஆண்டவனும் அழைத்துடுவான்
என் உடன்பிறப்பை அவருடன் இருக்க

அவளுக்காய் நீதி கேட்க அங்கு நிற்கும்
அவளிற்கோ அளவில்லா ஆனந்தம்

தங்கையவள் உடன் சேர்ந்து
இறைவனையடி சேர்வாளே

உலகினை ஆள்பவரும் உயிர் பெற்று
செல்வாரே – அவள் உடன் பிறப்பின்
துணையாளே!!!

இவள்
கீதாவின் மகள்

எழுதியவர் : கீதாவின் மகள் (9-Mar-19, 5:55 pm)
சேர்த்தது : கீதாவின் மகள்
பார்வை : 200

மேலே