ஈன முறுவார் இவர் - நீதி வெண்பா 14

நேரிசை வெண்பா

பெற்றமையும் என்னாப் பெரியோரும் பெற்றபொருள்
மற்றமையும் என்றே மகிழ்வேந்தும் – முற்றியநன்
மானமிலா இல்லாளும் மானமுறு வேசியரும்
ஈன முறுவார் இவர். 14 நீதி வெண்பா

பொருளுரை:

பெற்ற பொருளில் திருப்தியடைந்தேன் என்னாத பெரியோர்களும், பெற்ற பொருள் இனிப் போதும் என்று திருப்தி அடையும் அரசனும், சிறந்த நல்ல நாணமில்லாத மனையாளும், நாணமடைகின்ற பொது மகளிரும் ஆகிய இவர்கள் தாழ்வினை அடைவார்கள்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-Mar-19, 6:36 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 50

சிறந்த கட்டுரைகள்

மேலே