ஈன முறுவார் இவர் - நீதி வெண்பா 14
நேரிசை வெண்பா
பெற்றமையும் என்னாப் பெரியோரும் பெற்றபொருள்
மற்றமையும் என்றே மகிழ்வேந்தும் – முற்றியநன்
மானமிலா இல்லாளும் மானமுறு வேசியரும்
ஈன முறுவார் இவர். 14 நீதி வெண்பா
பொருளுரை:
பெற்ற பொருளில் திருப்தியடைந்தேன் என்னாத பெரியோர்களும், பெற்ற பொருள் இனிப் போதும் என்று திருப்தி அடையும் அரசனும், சிறந்த நல்ல நாணமில்லாத மனையாளும், நாணமடைகின்ற பொது மகளிரும் ஆகிய இவர்கள் தாழ்வினை அடைவார்கள்.