வாயூரும் எச்சிலிட்டு - - - -
வாயூரும் எச்சிலிட்டு - - - -
*************************************************
வாயூரும் எச்சிலிட்டு செவ்வதரந் தனைசுவைத்து
காயமுறும் சேர்க்கையிலே தூரியசுகம் அதுகண்டு
மாயமாம் காதலைப் போற்றியே பின்தொடர்ந்து
நாயாய லைந்துபின் பேயாய்த்திரிந் தொழிந்தேன்
பேயாய் உடல்கொண்ட காரைக்கால் அம்மைக்கு
நயமாய் சொல்லுரைத்த ஆனைக்கா அண்ணலே
செய்வாய் ஏதேனும் இவன்மீட்சி பெறுதற்கே !