பூவாய் புதுமலராய் புன்னகைப் பேரெழிலாய்

பூமலர்கள் பூவிதழ்தன் னைத்திறந்தால் பூந்தோட்டம்
பூவை இதழ்விரித்தால் புன்னகை பூந்தோட்டம்
பூவாய் புதுமலராய் புன்னகைப் பேரெழிலாய்
பூவேசெவ் வாய்மலர் வாய் !

----பூ மோனை கவிதையில் விரிந்திருக்கும்
அழகு காண்க .

எழுதியவர் : கவின் சாரலன் (11-Mar-19, 9:44 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 60

மேலே