விதைக்குள் வனம்
விதைக்குள் வனம் !
ஒவ்வொரு விதைக்குள்ளும்
ஆயிரமாயிரம் வனங்கள் !
அது உலகிற்கு தெரிய
வசிப்பிடமாக
மண்ணில் ஒரு துளை
!அதற்குள் துளிர்க்கும்
சுண்டு விரல் தண்டு
உறிஞ்சிடும் நீர்,
ஈர்த்திடும் ஒளி
மள மளவென உயர்ந்திடும்
செடியாய், கொடியாய், மரமாய் !
அதனுள் பூத்திடும் பூக்கள்
பூக்களின் பின்னே
காய்கள் பழங்கள் !
அதற்குள் கிடைத்திடும்
ஓராயிரம் விதைகள் !
ஒவ்வொரு விதையிலும்
ஆயிரமாயிரம் வனங்கள் !