நீதான் யாதுமாய் எனக்கு

நீதான் யாதுமாய் எனக்கு...

விக்கி, விண்டுபோகும் மனதில்
சொட்டும் தேன் நிரப்ப...
இனிக்கும் கண்ணீரில் மிதக்கும்
இதயத்தில்
இதமாய் சொடுக்கெடுக்க...
விள்ளல் விள்ளலாய் பிரிந்த
உள்ளத்தை இணைத்து உயிர் கொடுக்க...

மாய நிமிடங்கள் கரைந்துவிடும்
தெரியும்...
இறுக்காமல் தளர்த்தும்
அன்பின் அரைநொடி போதும்...
மூடும் விழிகளில் உதிக்கும் மோட்சத்தில்,
கடன் கேட்டால்
கடவுளுக்கும் கிடைக்காது...

எனக்கே எனக்கானது என்றும்
உனக்கே உனக்கு...
நீதானே யாதுமாய் எனக்கு....

எழுதியவர் : (12-Mar-19, 1:47 pm)
சேர்த்தது : சிவா பாலா
பார்வை : 67

மேலே