நிலாக்கால நினைவுகள்

நிலாக்கால நினைவுகள்!
கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்


அம்மா நிலாவைக் காட்டி
நிலா நிலா ஓடி வா
பாடி குழந்தை பருவத்தில்
அன்னம் ஊட்டி விட்ட
அந்த நிலாக்கால நினைவுகள்!

விண்ணில் மிதந்து வரும்
முழுநிலவைப் பார்த்து
மண்ணில் அமர்ந்து
கூட்டாஞ்சோறு உண்டு
உறவுகளுடன் உறவாடி
மகிழ்ந்த நிலாக்கால நினைவுகள்!

காதலனாக முழுநிலாவின்
நிழலில் அமர்ந்துகொண்டு
காதலியின் முகம் கண்டு
கவிதையில் முகம் செதுக்கி
ஓவியமாகிய அவளின் நினைவுகள் !

காதலர்களாக முழுநிலா ஒளியில்
சிரித்த சிரிப்புகள் சிந்தனைகள்
காதல்கள் மோதல்கள்
உறவுகள் ஊடல்கள்
துடிப்புகள் நடிப்புகள்
படிப்புகள் படிப்பினைகள் !

இளையநிலாவைக் கண்டு
அள்ளக் அள்ளக் குறையாத
காதலர்களின் மனதில் நிழலாடிய
இன்பங்கள் துன்பங்கள்
நிலாக்கால நினைவலைகள்!



கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்,
வன்னியம்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம்

எழுதியவர் : பொன்விலங்கு பூ.சுப்ரமணிய (12-Mar-19, 9:59 pm)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
பார்வை : 170

மேலே