பிணியால் வருந்தும் பிறஉறுப்பைக் கண்டு கலுழுமே கண் – நன்னெறி 20
நேரிசை வெண்பா
பெரியவர்தம் நோய்போல் பிறர்நோய்கண் டுள்ளம்
எரியின் இழுதாவர் என்க – தெரிஇழாய்!
மண்டு பிணியால் வருந்தும் பிறஉறுப்பைக்
கண்டு கலுழுமே கண். 20 - நன்னெறி
பொருள்:
ஆராய்ந்த ஆபரணத்தையுடையவளே!
கண்கள், பாதிக்கப்பட்ட நோயினால் வருந்துகின்ற மற்றைய உறுப்புக்களைப் பார்த்து அழும்.
அது போல, அறிவொழுக்கங்களில் பெரியவர் பிறருக்கு வந்த நோயைக் கண்டு தமக்கு வந்த நோய்போல நினைத்து மனம் நெருப்பிலே பட்ட நெய் போல் உருகுவார் என்று அறியக்கடவாய்.