எங்கேயவன்

ஆலிழை நூல் பிடித்து
அரவமொன்று மேலேற
அண்ணலவன் பார்த்ததிலே
அத்தனையும் கீழிறங்கும்
விழுதென்பது வீழாமலே,
எழுந்தவள் பார்வையோ
ஏகாந்த வண்ணங்களில் நின்றிருக்க,
அரவமது அவளேறி
விழியிரண்டும் துடைத்து விட,
விழித்தவள் வண்ணங்களில்
இருளது திசைபரப்ப
இறங்கியவன் அண்ணலோ இன்னலோ,
யானறியேன் பராபரமே!!!!!

---சக்தி.....

எழுதியவர் : சக்தி (16-Mar-19, 10:08 pm)
சேர்த்தது : Shakthi
பார்வை : 134

மேலே