என்னவன்

குடவரைக் கோயில் வடித்த
சிற்பியைப்போல் என்னுளத்தைக்
காதலால் குடைந்தங்கு தன்னை
நிலை நிறுத்திக் கொண்டானே
கர்பகிருஹத்து மூலவரப்போல்
இனி காலமுள்ளவரை அவன்தானே
என் காதல் தெய்வம் என்னவன் அவனே
என்னுள்ளத்தில் உறையும் என் தெய்வம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (18-Mar-19, 8:44 pm)
Tanglish : ennavan
பார்வை : 158

மேலே