என்னவன்
குடவரைக் கோயில் வடித்த
சிற்பியைப்போல் என்னுளத்தைக்
காதலால் குடைந்தங்கு தன்னை
நிலை நிறுத்திக் கொண்டானே
கர்பகிருஹத்து மூலவரப்போல்
இனி காலமுள்ளவரை அவன்தானே
என் காதல் தெய்வம் என்னவன் அவனே
என்னுள்ளத்தில் உறையும் என் தெய்வம்