கண்களால்
காந்த மாயின கண்களிவை
கவர்ந்திழு யிரும்பாய் இதயங்களே,
சாந்தப் படுத்திடும் இசையாகி
சாய்த்திடும் இருவிழிப் பார்வைகளே,
நீந்திடும் விழிகளின் வண்ணங்களை
நீலவான் வில்லும் பெற்றதுவே,
வேந்தனும் தாழ்ந்து வீழ்ந்திடுவான்
வஞ்சியின் கண்களாம் கவிதையாலே...!