அவள்
நீல வான தடாகத்தில்
பூத்த வெண் தாமரையாய்
திங்கள் அங்கு பூத்திருக்க
மண்ணில் பூத்த வெண் தாமரை
இவள் என் மனதெனும் தடாகத்தில்
பூத்திருக்கிறாள், பூத்தமலர் இவள்
இருவர் காதலின் தூய்மையால்
வாடா வெண்தாமரையாய்
என் மனதின் ஒரே ஒரு
மங்கள மலராய்