காதல்

உன்னைப் பார்த்தேன்
பார்த்த உடனே என்மனம்
என்னிடம் சொல்லியது ,
' நீதானே எனக்குகந்தவள்' என்று
மனம் அப்படிச்சொல்ல நானும்
மனம் சொல்லியதை அப்படியே
என் இதயத்தில் எழுதிவைத்தேனே
' நீதானடி பெண்ணே என்னவளென்று'
இதயத்தில் நான் எழுதிவைத்ததை
உன்னிடம் நேரில் சொல்ல முயன்றேன்
எனோ முடியவில்லை , அப்போது
மனம் மீண்டும் பேசியது
உன் மனதைத்திறந்து காட்டிவிட்டு
எழுத்துவடிவத்தில் ஓர் கவிதையாய்
அதை மடலாய் அவளிடம் சேர்த்துவிடு என்று
அப்படியே மனம் சொன்னதை கவிதையாக்கினேன்
காகிதத்தில் வடித்த கவிதையை அவளிடம்
சேர்க்க முயல , எங்கிருந்தோ காற்று மெல்ல வீச
நான் எழுதிய என் உள்ளம் காற்றில் பறந்தது
உன் மார்பில் சென்று தைக்க , நீயும்
அதைப்பிரித்து பார்த்தாய் என்னையும் பார்த்தாய்
கண்கள் சேர்ந்தன காதல் ராகம் பாடி
எங்களை இப்படி சேர்த்துவைத்த காற்றிற்கு
நான் நன்றி சொன்னேன் அவள் இதழ்கள் விரிந்தன
வெளி வந்தது ஓர் மௌனச்சிரிப்பு
மௌனம் சம்மதம் சொல்ல சிரிப்பு
அதற்க்கு இசைவு தந்ததோ !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (20-Mar-19, 4:32 pm)
Tanglish : kaadhal
பார்வை : 185

மேலே