கவிதை தினம்

கவிதை தினம்
******************
பலகோடி கற்பனையில்
மிதந்து கொண்டிருக்கும் கவிஞா..!
உன் நித்திரையிலும் கற்பனைகள்
வந்து குவிந்தது என்ன மாயமோ...!!
செல்லாத இடமெல்லாம் தன்
அகச்சிறகுகளால் சென்று வரும் தலைவா....!
இளம் காதலர்களின் உறவினை
தன் காதலைப் போல்
கற்பனையில் எடுத்தியம்பும் புலவா...!!
உனக்கு ஓய்வு ஒரு போதும் இல்லையா......
உன் மூச்சு நின்று விட்டாலும் கூட உன் புகழை
கல்லறையிலும் உன் கவிதை கவிபாடும்...
சாத்திரங்கள் மாறினாலும்... சரித்திரங்கள் தேங்கினாலும்...உன் கற்பனைகள் என்றும்
ஓயப்போவதுமில்லை... தீரப்போவதுமில்லை....
"இன்று கவிதை தினமாம் விழித்தெழு கவிஞா"

எழுதியவர் : கவிஞர் பெ.இராமமூர்த்தி (21-Mar-19, 10:14 am)
Tanglish : kavithai thinam
பார்வை : 342

மேலே