என்ன நடக்குமோ---பாடல்---

காதலின் தீபம் ஒன்று... மெட்டில்...


பல்லவி :

வீதிகள் தோறும் கட்சி
கூட்டமேனோ?... நம் நாட்டில்... (2)
ஊழலின் அச்சம் நெஞ்சில்
கோடையின் வெப்பம் கண்ணில்
வருத்தமென்னைத் தீயில் வாட்ட...

வீதிகள்...


சரணம் 1 :

வார்த்தையில் பொய்கள் உண்டு
வந்ததே துன்பம் அன்று... (2)

மண்ணையே ஏலம் விட்டு ஆ.ஆ.ஆ..ஆஆ...
மண்ணையே ஏலம் விட்டு மந்திரி போவதோ?...
நம்பியே வாழும் மக்கள் நடைபிணம் ஆவதோ?...
என்ன நாசம் செய்யுமோ?...

வீதிகள்...


சரணம் 2 :

கொள்கையோ?... குப்பை போல
நாத்தமும் வீசிச் செல்லும்... (2)

கல்வியே காசு என்னும் ஆ.ஆ.ஆ..ஆஆ...
கல்வியே காசு என்னும் மெத்தையில் தூங்குமோ?...
சட்டமோ?... காற்றில் ஆடும் அரசியல் ஊஞ்சலோ?...
எல்லாம் நம்மைக் கொல்லுமோ?...

வீதிகள்...

எழுதியவர் : இதயம் விஜய் (21-Mar-19, 5:20 pm)
சேர்த்தது : இதயம் விஜய்
பார்வை : 49

மேலே