அலைமோதும் காதல்---பாடல்---

தத்தகாரம் :

பல்லவி :

தரனான தானனா தரனான தானனா
தன தனன நான தானனே
தன தனன நான தானனே
தனன நான
தனன நான
தனன நான நான நானனே
தனன நான நான நானனே

சரணம் :

தரன நனன தான நனன்ன
தன்ன நனன்னன் நான்
தன தன்ன நனன்னன் நான்...
தரன நனன நான நனன்ன
நன்ன நனன்னன் நான்
நன நன்ன நனன்னன் நான்...
தரனான... ஆ.ஆ.ஆ. ஆஆ.. ஆ..
தரனான தன தனனான தனன நானனன்
தன தனன நானனன்...
தரனான... ஆ.ஆ.ஆ. ஆஆ..ஆ..
தரனான நன நனனான நனன நானனன்
நன நனன நானனன்...
தனனான தனனான தனனான தனனான
தனனான தனனான தனனான தனனான
தனன்ன நான தனன
தனனான நன்ன தனன்ன - தன்ன...



இது ஒரு சோடி பாடல்...


பல்லவி :

ஒரு பூவு பூக்கவே இளம் வண்டு ஏங்குதே...
புது இளைய ராகம் மீட்டவே
ஒரு இதய வீணை வாங்குதே...

மனதில் காதல்
எழுதும் பாடல்

மழையைத் தூவும் மேகம் ஆகுதே
நனையும் போது மோகம் கூடுதே...

ஒரு பூவு பூக்கவே...


சரணம் 1 :

கிளையும் கொடியும் காதல் நடத்தும்
இன்ப உறவைப் போல்
மனம் அன்பில் இணைகின்றேன்...

இரவின் மடியில் வானில் சிரிக்கும்
வண்ண நிலவைப் போல்
தினம் உன்னில் மறைகின்றேன்...

விழியோடு... ஆ.ஆ.ஆ. ஆஆ..ஆ..
விழியோடு விழி கதைபேசி கனவில் ஓடிடும்
தனி உலகைத் தேடிடும்...

மனதோடு... ஆ.ஆ.ஆ. ஆஆ..ஆ..
மனதோடு மனம் அலைமோதி ஜதிகள் பாடிடும்
உயிர் பரதம் ஆடிடும்...

உறையாத பனியாகி உயிரோடு உருண்டோட (2)
மயங்கிப் போகும் இதயம்
அதுமீண்டும் மெல்லத் துடிக்கும் - அன்பில்...

ஒரு பூவு பூக்கவே...


சரணம் 2 :

உயிரில் நதிகள் பாயும் உணர்வில்
உள்ளம் கரைகின்றேன்
அதில் உன்னை வரைகின்றேன்...

உதிரத் துளியில் நீயும் வசிக்க
என்னைத் தருகின்றேன்
உனை அள்ளி வருகின்றேன்...

புரியாத... ஆ.ஆ.ஆ. ஆஆ..ஆ..
புரியாத ஒரு புதுவேதம் இளமை ஓதிடும்
சுகம் புதுமை ஆகிடும்...

விளையாத... ஆ.ஆ.ஆ. ஆஆ..ஆ..
விளையாத மனம் தளிராட இனிமை வீசிடும்
அதன் அழகும் கூடிடும்...

இலையோடு நரம்பாக விலகாது உறவாடி (2)
இணைந்து வாழும் பருவம்
பலநூறு வண்ணம் கொடுக்கும் - நெஞ்சில்...

ஒரு பூவு பூக்கவே...

எழுதியவர் : இதயம் விஜய் (21-Mar-19, 10:19 pm)
சேர்த்தது : இதயம் விஜய்
பார்வை : 79

மேலே