மல்லி மல்லி
ஜாதிமல்லி பூத்திருக்க
ஜாதிமல்லியாள் அவள் சிரிக்க
இந்த ஜாலத்தில் நான் இருக்க
சொல்லடி ஜோதிக்கிளியே நீ,
யாரடி என் மனதில் இந்த மல்லியில்
நீயே சொல்வாயே
இதற்கு சொன்னது ஜோதிக்கிளியும்
ஐய, இதில் என்ன சந்தேகம்
அந்த வாசமுள்ள மல்லி நீ
மயங்கும் மல்லியானாலும்
சிரிக்கும் ஜாதிமல்லி அவளே
உன் மனதை நிறைக்கவந்த மல்லி
என்றது கொஞ்சமும் தயங்காது